Saturday, February 6, 2010

அசல் விமர்சனம்



அசல் 
அஜித் நடித்து சுமார் ஒரு வருடம் இருபத்தைந்து  நாட்கள் கழித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம்......
அஜித் தோற்றமே படத்தை  பார்க்க வேண்டும் என்று தூண்டும்.ஆனால் படம்.......
அஜித்துக்கு இதில் அப்பா மகன் என இரட்டை வேடம் ....
அப்பா அஜித்திற்கு மூன்று மகன்கள் சாம்(சம்பத் ),விக்கி(ராஜீவ் ) & சிவா  (அஜித் ). சிவா அப்பா அஜித்தின் கீபுக்கு பிறந்தவர் அதனால் விக்கி ,சாம் இருவரும் சிவாவை வெறுக்கிறார்கள் .அப்பாவோ சிவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இருவரும் கொண்டுவரும் வேலைகளை சிவாவை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார் அப்பாஇதனால் மிகவும் கோபப்படும் இருவரும் மாமாவின் (பிரதிப் ரவாத் -கஜினி வில்லன்யோசனையுடன் அந்தவேலையை இருவரும் சேர்ந்து செய்ய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள்அப்பா தரமறுக்க மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்இதற்கிடையில் அப்பா அஜித் இறக்க மகன் அஜித்தை வெறுப்பேற்றி அனைத்து சொத்துக்களையும் இருவரும் வாங்கிவிடுகிறார்கள்அந்த contract யை இருவரும் தொடங்க இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் செட்டி(கெல்லி டோர்ஜி ) விக்கியை கடத்துகிறார்இது தெரிந்த சிவா விக்கியை காப்பாற்றுகிறேன் அதன் பின் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்கிறார்பிறகு விக்கி யை காப்பாற்ற சாரா (சமிர ரெட்டி ) யை அழைத்து கொண்டு மும்பைக்கு மிரசியிடம்(பிரபு சிவாவை வளர்த்தவர் ) செல்கிறார்அங்கே சுலபா (பாவனா ),டான் சம்சா(யூகி சேது ) இருக்கிறார்கள்விக்கி யை காப்பாற்ற செட்டியின் ஆட்களை கொள்கிறார் சிவாஇதற்கிடையில் சாரா செட்டியிடம் சிக்கிவிடுகிறார்சாம்விக்கியை காப்பாற்ற அனைத்து சொத்துகளையும் செட்டிக்கு எழுதி கொடுக்கிறார்செட்டி வாங்கிகொண்டு மூவரையும் கொள்ள நினைக்க இப்பொழுது சிவா வந்து காப்பற்றிவிடுகிறார்ஆனால் சாம் விக்கி இருவரும் சிவாவை துப்பாக்கியில் சுட கடலில்  விழுகிறார் . சிவா பிழைத்தார  மூவரும் இணைந்தார்களா என்பது மீதி கதை....
அப்பாவின் தோற்றத்தில் அஜித் வெளுத்து வாங்குகிறார்அப்பா அறிமுகமானவுடனேயே கதை எங்கோ செல்ல போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகிறார்கள் ஆர்வம்  குறைவதற்குள் அப்பா செத்து விடுகிறார்...
ஆரம்பத்தில் வரும் சண்டைகாட்சிகள் மிக அருமை .
ஆனால் படம் அதே வேகத்துடன் செல்லவில்லைசமிரரெட்டி படத்தில் ஆங்கில படங்களில் வரும் நயகியைபோல் வைக்கிறார் . பாவனா அச்சு அசல் வழக்கமான தமிழ் நாயகியாக வருகிறார்.
யுகிசெது மற்றும் அவருடன் வரும் எடுபிடிகள் சிரிக்க வைக்கிறார்கள் . சிரிப்பு தொடரவில்லை .......
பிரபு அனைத்து படங்களிலும் வரும் அதே கேரக்டர் இதில் பெயர் மிராசி .
துப்பாக்கியை முதலில் எடுத்து சுடும் காட்சி -ஜாக்கிசான் படத்தில்  பார்த்தது புதுசா எதாவது யோசிங்கப்பா.
படத்தில் அஜித்தை தவிர அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள்அனைவரின் வசனங்களிலும் தல தல என்று சொல்வது அஜித்  ரசியர்க்லையே வெறுப்படைய செய்கிறது.
அஜித்திற்கு வசனங்கள் நான்கு பக்கங்கள் தான் என்று சொல்கிறார்கள் நாம் எழுதினா அன்தும் ஒரு பக்கத்திற்குள் வந்துவிடும் அவ்வளவு கம்ம்மியாக பேசுகிறார் 
வசனங்கள்  நன்றாக  தான் இருக்கிறது ஆனால் புரியவில்லை.(கொஞ்சம் சத்தமாக  பெசிருக்கலம் )
 இடைவேளைக்கு பின் சமிரரெட்டி யை சந்திப்பது அப்பாவின் சாவு போன்றவற்றில் twist (திருப்பங்கள் ) வைத்திருக்கிறார்கள்டைரக்டர் நினைத்திருப்பார் போல ஆனால் நாம் முன்பே யூகித்துவிடலாம்
திரைக்கதை வேகமாகவும் இல்லை மிதமாகவும் இல்லை ஆமை போல் ஆரம்பம் முதல் கடைசிவரை செல்கிறது . 
கதை சொல்லவேவேண்டாம் நீங்கள் இதுவரை திரையில் பார்த்திராத புத்தம்புதிய கதையல்ல உலக மகா பழசு .....
யுகிசெது கதவை திறக்கும் காட்சியில் அரங்கமே சிரிக்கிறது நல்ல நகைச்சுவை .
படத்தில் பாடல்கள் இருநாயகிகளுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்திருக்கிறார்கள் நல்லதொரு பிரிப்பு டைரக்டர்க்கு  பாராட்டுகள்..
பாடல்களுக்கு அஜித் பொருந்தவே இல்லை .....
ஆனால் படம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக இருக்கிறர்கள் .சண்டைகாட்சிகளில் அஜித் பறக்காமல் பாயாமல் அழகாக நின்று விளையாடுகிறார்.
அழகான காட்சியமைப்புகள் காமிரா மேனுக்கு  பாராட்டுகள் .....ஆனால் பில்லா சாயல் 
அஜித் படம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறார்.. கொஞ்சம் நடிங்க சார் ...
இந்த கதை  திரைக்கதைக்கு மூன்று பேர் ஏன் என்று தெரியவில்லை பழைய படங்களின் டிவிடி போதும் ..
மொத்தத்தில் அஜித்திடம் நிறைய எதிர்பார்கிறோம் ....
நடந்தது பொதும் நடிக்க துவங்குங்கள் தல .......
அசல் கலர் ஜெராக்ஸ் .........





No comments:

Post a Comment