Saturday, May 8, 2010

சுறா

குருவி, வில்லு, வேட்டைக்காரனில் பார்த்த அதே நாலு நாள் தாடி விஜய், அதே வசன உச்ச‌ரிப்பு, பன்ச் டயலாக், ஓபனி‌ங் பாடல், ஹிஸ்டீ‌ரியா வில்லன், கிச்சுகிச்சு வடிவேலு, அசமந்தான ஹீரோயின்... படத்தின் பெயர் மட்டும் வேறு, சுறா.

WD
யாழ் குப்பத்தின் செல்லப்பிள்ளை சுறா (விஜய்). குப்பத்து ஜனங்களுக்கு ஒரு கஷ்டமென்றால் கிரஃபிக்ஸ் சூறாவளியுடன் பொங்கியெழுவார். எண்பது வயது கிழவர், இதுவரை சுறாவோட வழிகாட்டலில் வாழ்ந்திட்டோம், இனி என்ன செய்யப் போகிறோம் என்று கண்கலங்கும் போது நமக்கு நெஞ்சு வெடிக்கிறது. முப்பது வயசு சுறா எண்பது வயசு பெ‌ரிசுக்கு எப்பிடிப்பா வழி காட்டினார்?

குப்பத்து மக்களின் ஒட்டுமொத்த பில்டப்பில் வாழும் சுறாவுக்குள் ஒரு லட்சியம் ஒளிந்திருக்கிறது. மொத்த குப்பத்துக்கும் தீயில் எ‌ரியாத, மழையில் ஒழுகாத காரை வீடு கட்டித்தர வேண்டும். லட்சியத்தை எப்படி அடைவது என்று சுறா யோசிக்கும் போது, உள்ளூர் அமைச்சர் குப்பத்தையே ூக்கிவிட்டு தீம் பார்க் கட்ட பிளான் பண்ணுகிறார். சுறசுறுசுறுப்படைகிறார்.

ஓவர் நைட்டில் அமைச்ச‌ரின் கடத்தல் பொருட்களை கையகப்படுத்தி, மும்பையில் அதை விற்று காசாக்கி (100 கோடி) ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் அடுத்த நாள் காலை குப்பத்துக்குள் எ‌ண்ட்‌ரியாகிறார் விஜய். காசு குடு சந்தைக்குப் போணும், ஆத்தா வையும் சப்பாணி மாதி‌ி அமைச்சர் ூறு கோடி கேட்டு விஜய்யை இம்சிக்க, அவர் தர மறுக்க, இறுதியில் விஜய்யின் காரை வீடு கனவு நிறைவேறியதா என்பதுடன் சுபம்.

திரைக்கதையில் ஓட்டையைப் பார்த்திருக்கிறோம். ஒரு ஓட்டையையே திரைக்கதையாக்கியிருக்கும் திறமைசாலி இந்தப் படத்தை இயக்கியிருக்கும் ராஜகுமார். புயலில் அறுபது மீனவர்கள் மாட்டிக் கொண்டார்களாம். அறுபது பேரையும் விஜய் தனியாளாக கரை சேர்த்தாராம் (ஏன், அந்த மீனவ நண்பர்களுக்கு நீச்சல் தெ‌ரியாதா?). ஆனால் அறுபது பேரை காப்பாற்றிய விஜய்யை மட்டும் காணவில்லை. விஜய்யின் அருமை பெருமைகளை குப்பம் அள்ளிவிடும் போது இடுப்பளவு தண்ணியிலிருந்து எம்பி வருகிறார் விஜய். தொடங்குகிறது ஓபனிங் சரவெடி பாட்டு.

ஐம்பது ரேஷன் கார்டையே பாதுகாப்பாக வைக்க முடியாமல் பா‌ி‌ரியா‌ரிடம் ஒப்படைக்கும் விஜய், ூறு கோடி பெறுமானமுள்ள லேப் டாப்களை கடத்தி மும்பை பார்ட்டியிடம் விற்று... அழகழகா பூச்சுற்றுகிறார்கள். அதிலும் சிவகாசி புஸ்வாணத்தை கொளுத்தி கடத்தல்காரர்களை ஓடவிடுவதெல்லாம் ‘தமிழ்ப்படத்தை’யே கிண்டலடிக்கும் சமாச்சாரங்கள்.
ம், நடனமும் அற்புதமாக வருகிறது. ஆனால் இந்த ‘ஒளியும் ஒலி’யும் மட்டும் ஒரு படத்துக்குப் போதாது என்பதை அவர் எப்போது பு‌ரிந்து கொள்ளப் போகிறார்? அதேபோல் காமெடி என்றதும் தோளை குறுக்கி வாய்ஸை நாய்ஸாக மாற்றுவதையும் விட்டுவிட்டால் நல்லது. கோர்ட்டில் அவர் அடிக்கும் கொட்டம் காமெடி அல்ல, ராவடி.

தேவையேயில்லாத திணிப்பு தமன்னா. நாய் காணாமல் போனதுக்காக கடலில் விழுந்து சாகப் போகும் இவரது கேரக்டர் இந்த வருடத்தின் மொக்க ராசு. சி‌ரிக்க மட்டுமே தெ‌ரிந்த இவ‌ரிடமிருந்து நடிப்பை எதிர்பார்க்க முடியாது என்பதற்கு இந்தப் படம் இன்னொரு சாட்சி. 

சுறாவின் தோஸ்தாக வரும் வடிவேலுக்கும் பெ‌ரிதாக ஸ்கோப்பில்லை. என்றாலும் கிடைக்கிற கேப்பிலும் கிச்சு கிச்சு மூட்டுகிறார். பாகவதர் வெண்ணிறாடை மூர்த்தியை பேசாமலே சதாய்க்கிறாரே... சபாஷ். முகர்ந்து பார்த்தே வெளியாள் தனது இடத்துக்கு வந்திருப்பதை கண்டுபிடிக்கும் வில்லன் தேவ் கில் அடுத்தடுத்த காட்சிகளில் தேய்ந்த கில்லாகிறார். தனது கெஸ்ட் ஹவுஸில் அவ்வளவு போலீஸுக்கு மத்தியில் விஜய்யை ஒன்றும் பண்ண முடியாமல் கையை பிசைவதெல்லாம் படா தமாஷ். 

படத்தின் ஆரம்ப காட்சிகள் ஏதோ சீ‌ரியல் பார்க்கும் எஃபெக்டையே தருகின்றன. ஏகாம்பரத்தின் கேமராவும், எடிட்ட‌ரின் கத்தி‌ரியும் இருந்ததால் பிழைத்தோம். படத்தின் ஆகப் பெ‌ரிய ப்ளஸ் பாடல்களும், விஜய்யின் நடனமும். கனல் கண்ணனின் ஆ‌க்சனில் புதிதாக ஒன்றுமில்லை.

விஜய் மீது போலீஸ் இன்ஸ்பெக்டர் ‌ரியாஸ்கான் கஞ்சா கேஸ் போட்டு கோர்ட்டில் நிறுத்துவதும், விஜய் நீதிபதியிடம் காமெடி செய்து ‌ரியாஸ்கான் வீட்டை சோதனை போட வைப்பதும், அவர் வீட்டில் கஞ்சா கண்டுபிடிக்கப்பட்டு அவரை கைது செய்து ஜெயிலுக்கு அனுப்பி, விஜய்யை விடுவித்து... ஐயா சத்தியமா நம்புங்க இந்த விஷயங்கள் எல்லாம் ஒரே நாளில் நடக்கிறது. 

லெதர் கோட் போட்டு ஐம்பது லட்ச ரூபாய் கா‌ரில் சவு‌ி முடி விக்க வந்தேன் என்கிறார் விஜய். அதுவும் பாம் இருப்பதாக தகவல் கிடைத்த அமைச்ச‌ரின் வீட்டில். அப்பிடிங்களாயா... நீங்க போய்ட்டு வாங்க என சல்யூட் அடித்து அனுப்பி வைக்கிறது போலீஸ். ஒருத்தரை ஹீரோவாக்க மத்தவங்க எல்லோரையும் முட்டாளாக்க வேண்டுமா?

கூரான உறுதியான பற்கள் அதிகம் இருப்பதால் ‘கடி’ப்பதில் சுறாவுக்கே முதலிடம். இந்த அறிவியல் உண்மையை அனுபவப்பூர்வ மாக்கியிருக்கிறார்கள் விஜய்யும், ராஜகுமாரும்.



நமது குசும்பு விமர்சன குழுவிற்கு வேலைப்பளுவை குறைக்கும் விஜய் வாழ்க விஜய் படங்கள் தொடர்ந்து மொக்கையாய் வர வாழ்த்துகிறோம் 
-குசும்பு விமர்சன குழு 

Sunday, March 7, 2010

ஓ மகசீயா ஓ மகசீயா - பாடல் வரிகள்

நமது குசும்பு கொள்கைகளுடன் 
தற்பொழுது மிகவும் பிரபலமாக விளங்கும் பாடல் இது! எந்தவித அர்த்தமும் அற்ற வார்த்தைகள், ஆனால் பாடிய விதம் மிகவும் அருமை! ஒருமுறை கேட்டு பாருங்கள்!!! நிச்சயம் உங்களின் மனதைக் கவரும் மெல்லிசைப் பாடல்!!!


ஓ மகசீயா.. ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க...
ஓ ஷக்கலக்க..
ஓ ரண்டக்க..(x2)

ஓ லாகி ஓ லாகி..
ஆயக யகி யகி..
மெஹோ ... மெஹோ...
டைலாமோ டைலமோ..
ரஹதுல்ல சோனாலி ஓ..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க...
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

சாம்ப சம்பாலே..
ஓ சூசே சாயோ சாயோ..
ஹசிலி பிசிலி..
இல்லாகி..
யப்பா ஜிப்பா..(x2)

டைலமொ டைலமொ..பல்லெலக்க..(x2)

நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஏ சல சாலா..
இஸ்க்கு பராரா..
ஒசாக முராய..
பூம் பூம் ஜக்காக்கா..
முக்கால்லா..
மய்யா மய்யா..(x2)

லாலக்கு..லாலக்கு.. டோல் டப்பிம்மா..(x2)

நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலாக்க..
ஓ ரண்டக்க..

ஓ லாகி ஓ லாகி..
ஆயக யகி யகி..
மெஹோ ... மெஹோ...
டைலாமோ டைலமோ..
ரஹதுல்ல சோனாலி ஓ..

ஓ மகசீயா..ஓ மகசீயா..
நாக்க முக்க நாக்க..
ஓ ஷகலக்க..
ஓ ரண்டக்க.

Wednesday, February 10, 2010

Sunday, February 7, 2010

Tamil 10 top sites [www.tamil10 .com ]

Saturday, February 6, 2010

அசல் விமர்சனம்



அசல் 
அஜித் நடித்து சுமார் ஒரு வருடம் இருபத்தைந்து  நாட்கள் கழித்து மிகவும் எதிர்பார்ப்புடன் வந்திருக்கும் படம்......
அஜித் தோற்றமே படத்தை  பார்க்க வேண்டும் என்று தூண்டும்.ஆனால் படம்.......
அஜித்துக்கு இதில் அப்பா மகன் என இரட்டை வேடம் ....
அப்பா அஜித்திற்கு மூன்று மகன்கள் சாம்(சம்பத் ),விக்கி(ராஜீவ் ) & சிவா  (அஜித் ). சிவா அப்பா அஜித்தின் கீபுக்கு பிறந்தவர் அதனால் விக்கி ,சாம் இருவரும் சிவாவை வெறுக்கிறார்கள் .அப்பாவோ சிவாவுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார். இருவரும் கொண்டுவரும் வேலைகளை சிவாவை கேட்டுவிட்டு வேண்டாம் என்கிறார் அப்பாஇதனால் மிகவும் கோபப்படும் இருவரும் மாமாவின் (பிரதிப் ரவாத் -கஜினி வில்லன்யோசனையுடன் அந்தவேலையை இருவரும் சேர்ந்து செய்ய அப்பாவிடம் பணம் கேட்கிறார்கள்அப்பா தரமறுக்க மூவரும் ஒன்றாக இருக்க வேண்டும் என்கிறார்இதற்கிடையில் அப்பா அஜித் இறக்க மகன் அஜித்தை வெறுப்பேற்றி அனைத்து சொத்துக்களையும் இருவரும் வாங்கிவிடுகிறார்கள்அந்த contract யை இருவரும் தொடங்க இந்த தொழிலில் கொடிகட்டி பறக்கும் செட்டி(கெல்லி டோர்ஜி ) விக்கியை கடத்துகிறார்இது தெரிந்த சிவா விக்கியை காப்பாற்றுகிறேன் அதன் பின் மூவரும் ஒன்றாக இருப்போம் என்று சொல்கிறார்பிறகு விக்கி யை காப்பாற்ற சாரா (சமிர ரெட்டி ) யை அழைத்து கொண்டு மும்பைக்கு மிரசியிடம்(பிரபு சிவாவை வளர்த்தவர் ) செல்கிறார்அங்கே சுலபா (பாவனா ),டான் சம்சா(யூகி சேது ) இருக்கிறார்கள்விக்கி யை காப்பாற்ற செட்டியின் ஆட்களை கொள்கிறார் சிவாஇதற்கிடையில் சாரா செட்டியிடம் சிக்கிவிடுகிறார்சாம்விக்கியை காப்பாற்ற அனைத்து சொத்துகளையும் செட்டிக்கு எழுதி கொடுக்கிறார்செட்டி வாங்கிகொண்டு மூவரையும் கொள்ள நினைக்க இப்பொழுது சிவா வந்து காப்பற்றிவிடுகிறார்ஆனால் சாம் விக்கி இருவரும் சிவாவை துப்பாக்கியில் சுட கடலில்  விழுகிறார் . சிவா பிழைத்தார  மூவரும் இணைந்தார்களா என்பது மீதி கதை....
அப்பாவின் தோற்றத்தில் அஜித் வெளுத்து வாங்குகிறார்அப்பா அறிமுகமானவுடனேயே கதை எங்கோ செல்ல போகிறது என்று ரசிகர்கள் மிகவும் ஆர்வமாகிறார்கள் ஆர்வம்  குறைவதற்குள் அப்பா செத்து விடுகிறார்...
ஆரம்பத்தில் வரும் சண்டைகாட்சிகள் மிக அருமை .
ஆனால் படம் அதே வேகத்துடன் செல்லவில்லைசமிரரெட்டி படத்தில் ஆங்கில படங்களில் வரும் நயகியைபோல் வைக்கிறார் . பாவனா அச்சு அசல் வழக்கமான தமிழ் நாயகியாக வருகிறார்.
யுகிசெது மற்றும் அவருடன் வரும் எடுபிடிகள் சிரிக்க வைக்கிறார்கள் . சிரிப்பு தொடரவில்லை .......
பிரபு அனைத்து படங்களிலும் வரும் அதே கேரக்டர் இதில் பெயர் மிராசி .
துப்பாக்கியை முதலில் எடுத்து சுடும் காட்சி -ஜாக்கிசான் படத்தில்  பார்த்தது புதுசா எதாவது யோசிங்கப்பா.
படத்தில் அஜித்தை தவிர அனைவரும் அதிகமாக வசனம் பேசுகிறார்கள்அனைவரின் வசனங்களிலும் தல தல என்று சொல்வது அஜித்  ரசியர்க்லையே வெறுப்படைய செய்கிறது.
அஜித்திற்கு வசனங்கள் நான்கு பக்கங்கள் தான் என்று சொல்கிறார்கள் நாம் எழுதினா அன்தும் ஒரு பக்கத்திற்குள் வந்துவிடும் அவ்வளவு கம்ம்மியாக பேசுகிறார் 
வசனங்கள்  நன்றாக  தான் இருக்கிறது ஆனால் புரியவில்லை.(கொஞ்சம் சத்தமாக  பெசிருக்கலம் )
 இடைவேளைக்கு பின் சமிரரெட்டி யை சந்திப்பது அப்பாவின் சாவு போன்றவற்றில் twist (திருப்பங்கள் ) வைத்திருக்கிறார்கள்டைரக்டர் நினைத்திருப்பார் போல ஆனால் நாம் முன்பே யூகித்துவிடலாம்
திரைக்கதை வேகமாகவும் இல்லை மிதமாகவும் இல்லை ஆமை போல் ஆரம்பம் முதல் கடைசிவரை செல்கிறது . 
கதை சொல்லவேவேண்டாம் நீங்கள் இதுவரை திரையில் பார்த்திராத புத்தம்புதிய கதையல்ல உலக மகா பழசு .....
யுகிசெது கதவை திறக்கும் காட்சியில் அரங்கமே சிரிக்கிறது நல்ல நகைச்சுவை .
படத்தில் பாடல்கள் இருநாயகிகளுக்கும் சரிசமமாக பிரித்து கொடுத்திருக்கிறார்கள் நல்லதொரு பிரிப்பு டைரக்டர்க்கு  பாராட்டுகள்..
பாடல்களுக்கு அஜித் பொருந்தவே இல்லை .....
ஆனால் படம் மிகவும் ஸ்டைலிஷாக இருக்கிறது அனைத்து கதாபாத்திரங்களும் அழகாக இருக்கிறர்கள் .சண்டைகாட்சிகளில் அஜித் பறக்காமல் பாயாமல் அழகாக நின்று விளையாடுகிறார்.
அழகான காட்சியமைப்புகள் காமிரா மேனுக்கு  பாராட்டுகள் .....ஆனால் பில்லா சாயல் 
அஜித் படம் முழுக்க நடந்து கொண்டிருக்கிறார்.. கொஞ்சம் நடிங்க சார் ...
இந்த கதை  திரைக்கதைக்கு மூன்று பேர் ஏன் என்று தெரியவில்லை பழைய படங்களின் டிவிடி போதும் ..
மொத்தத்தில் அஜித்திடம் நிறைய எதிர்பார்கிறோம் ....
நடந்தது பொதும் நடிக்க துவங்குங்கள் தல .......
அசல் கலர் ஜெராக்ஸ் .........





Thursday, January 21, 2010

குட்டி நச் விமர்சனம்

கு‌ட்டி  

தெலுங்கில் வெற்றிபெற்ற ஆ‌ரியா படத்தின் ‌‌ரீமேக். தனுஷ், ஸ்ரேயா நடிக்க மித்ரன் ஆர்.ஜவஹர் இயக்கியிருக்கிறார்.


WD
சினிமா கண்டுபிடிக்கப்பட்ட நாள்முதல் தொடர்ந்து வரும் முக்கோண காதல் கதைதான் குட்டியின் கதையும். தனுஷுக்கு ஸ்ரேயா மீது காதல், ஸ்ரேயாவுக்கோ சமீர் தத்வானி மீது லவ். சண்டைக்குப் போகாமல் சாத்வீகமான முறையில் ஸ்ரேயாவின் காதலை தனக்கு சாதகமாக்கிக் கொள்ளும் தனுஷின் கதாபாத்திரம் மட்டும் கொஞ்சமோ கொஞ்சம் புதுசு.

சமீர் தமிழ் சினிமாவில் வரும் வழக்கமான பணக்கார இளைஞன். ஸ்ரேயாவின் காதலை‌ப் பெற மாடியில் இருந்து குதிப்பேன் என்று மிரட்டுகிறார். பாவம்டி அவன் என்று தோழிகள் சாம்பிராணி போட, ஸ்ரேயாவும் ஐ லவ் யூ சொல்கிறார். தமிழ் சினிமா த‌‌ரித்திரத்தில்... ஸா‌ி, ச‌ரித்திரத்தில் ஆயிரத்தோரு முறை அரங்கேறிய இந்த‌க் காட்சியை மீண்டும் எப்படி வைக்கத் துணிந்தார்களோ?

இந்த ஐ லவ் யூவை கேட்டுக் கொண்டே எ‌ண்ட்‌ரியாகிறார் தனுஷ். ஸ்ரேயாவை பார்த்த உடனே அவருக்குள் காதல். நான் உன்னை காதலிக்கிறேன், நீ அவனை காதலிக்கிற என்று சொல்லியபடியே ஸ்ரேயா பின்னால் சுற்றுகிறார். இடையிடையே, ஸ்ரேயா எனக்குதான் என்று சமீருக்கு இனிமாவும் கொடுக்கிறார்.

ஸ்ரேயா, சமீர் காதலுக்கு திடீர் வில்லனாகும் ராதாரவிக்குப் (சமீ‌ரின் தந்தை) பயந்து ஊரைவிட்டு ஓடுகிறது காதல் ஜோடி. அவர்களுக்கு உதவி செய்கிறார் தனுஷ். சமீர் அப்பாவை சமாதானம் செய்து அழைத்து வரும் ஒருவார கேப்பில் ஸ்ரேயா மனதில் பெவிகாலாய் ஒட்டிக் கொள்கிறார் தனுஷ். மணவறையில் ஸ்ரேயா யாருக்கு மாலை போடுகிறார் என்பதுடன் சுபம்.

சுவாரஸியமே இல்லாத திரைக்கதையை ஒற்றை ஆளாக தூக்கி நிறுத்துகிறார் தனுஷ். அதற்காக ஓட்டைப் பானையில் ஒண்ணுக்கிருந்த மாதி‌ி லொட லொட என்று பேசுவது சில நேரம் எ‌ரிச்சலை கிளப்புகிறது. தனுஷ் யார், ஸ்ரேயாவுக்கு சொந்தம் என்று யாராவது உண்டா என்பது போன்ற அடிப்படை கேள்விகளுக்கு படத்தில் பதிலில்லை. ஆளில்லாத ஏ‌ரிக்கரை பூசா‌ரி தனுஷை பற்றி சொல்வது நம்பும்படி இல்லை.

ஸ்ரேயா எல்லா காட்சிகளிலும் சுமாராகவே இருக்கிறார். நடிப்பும் அப்படியே. வழக்கமாக அமெ‌ரிக்காவிலிலுந்து ‌ரிட்ட‌ன் ஆகும் பா‌ரின் மாப்பிள்ளை ரோல்தான் சமீருக்கு. என்ன இதில் படம் நெடுக வருகிறார்.

இரண்டு பாடல்கள் கேட்கலாம் ரகம். இந்த‌க் கதைக்கு எப்படி ஒளிப்பதிவு செய்தாலும் அதிகம்தான். குட்டி என்றால் பதினாறு அடி பாயுமாம். இந்த குட்டி தவழ்ந்திருப்பது நாலே அடி.

Wednesday, January 6, 2010

ரஜினியோட சமையல்

அஜித்தோட சோகப்பாட்டு